முல்லைத்தீவு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன!

மாவீரர் தினமான இன்று(27.11.2022) உயிரிழந்த தமது உற்றார், உறவினர், நண்பர்களை நினைவு கூர்ந்து தமிழர் பிரதேசங்களில் பலத்த பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நினைவேந்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு இந்த நிலையில் இன்று காலை முதல் முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளையும் தாண்டி முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி மாவீரர்களுக்கு மரியாதை செலுத்துவது வழமையாகும்.